கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
தென் தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம். ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. 10 நாள் திருவிழா கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓண விழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர்.
ஆயிரம் ஆண்டுகளாகக் கேரளத்தில் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் அன்று கேரளப் பெண்கள் கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர்.
ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி, நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை தயார் செய்யப்படும். ஐந்தாம் நாளன்று கேரளத்தின் பாரம்பரியமான படகுப்போட்டி நடைபெறும். ஆறாம் நாள் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம், பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடையும்.