குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 % ஆக தொடரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி அதன் இருமாத நாணய கொள்கைக் குழுவின் கூட்டம் ஏப்ரல் 3, 5, 6 தேதிகளில் நடைப்பெற்ற நிலையில், இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ விகிதம் உயர்த்த வேண்டாம் என MPC கூட்டத்தில் அனைவரும் வாக்களித்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை குறைக்க தொடர்ந்து நாணய கொள்கை வாயிலாக தொடர்ந்து போராடப்படும். வட்டி விகிதம் உயர்த்தப்படாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. ஆர்பிஐ ரெப்போ முடிவால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது என்று கூறினார்.