சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு தொடக்கம்

சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை 8-ந் தேதி பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 6 மணி நேர […]

சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை 8-ந் தேதி பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

6 மணி நேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu