நம் நிலத்தில் ஓர் அங்குலம் கூட யாரும் எடுக்க முடியாது - மத்திய அமைச்சர் அமித் ஷா 

April 11, 2023

நம் நிலத்தில் ஓர் அங்குலம் கூட யாரும் எடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். இந்தியாவின் தொலைதூர கிழக்கு எல்லையாக அருணாச்சலில் அமைந்துள்ள கிபித்தூ கிராமத்தில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை (விவிபி) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் அருணாச்சல பிரதேசத்தில் 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அருணாச்சல பிரதேசம் மட்டுமின்றி இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட், லடாக் பகுதிகளிலும் […]

நம் நிலத்தில் ஓர் அங்குலம் கூட யாரும் எடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவின் தொலைதூர கிழக்கு எல்லையாக அருணாச்சலில் அமைந்துள்ள கிபித்தூ கிராமத்தில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை (விவிபி) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் அருணாச்சல பிரதேசத்தில் 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அருணாச்சல பிரதேசம் மட்டுமின்றி இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட், லடாக் பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக வரும் 2026 வரை மத்திய அரசு ரூ.4,800 கோடி செலவிட உள்ளது.

அப்போது அவர் பேசுகையில், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வீரர்களும் ராணுவமும் நமது எல்லையில் இரவும் பகலும் பணியாற்றி வருவதால் இன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நிம்மதியாக உறங்க முடிகிறது. இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை யாரும் கேள்வி கேட்க முடியாது. நமது நிலத்தில் ஓர் அங்குலம் கூட யாரும் எடுத்துவிட முடியாது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu