தமிழ்நாட்டில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, வருமான வரி வசூல் கூடுதலாக பதிவாகியுள்ளது. இது குறித்து, வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று, வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அவர், “கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், தமிழகத்தின் மொத்த வருமான வரி வசூல் 108200 ஆக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை விட கூடுதலாக 300 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. அதாவது, 108500 கோடி ரூபாய் வருமான வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 70 லட்சத்தில் இருந்து 77 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், வரி ஏய்ப்பை தடுப்பதற்கு ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.