ஏப்ரல் 23 ஆம் தேதியான நேற்று, அதிதீவிர சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியுள்ளது. இது ஜி4 ரகத்தை சேர்ந்த தீவிர சூரிய புயல் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சூரிய புயலின் விளைவாக, உலகத்தின் அனைத்து பகுதிகளிலும், “துருவ ஒளிகள்” எனப்படும் ஆரோராக்கள் தென்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நகர்ப்புற பகுதிகளிலும் தெளிவாகத் தெரியும் படி இந்த ஆரோராக்கள் இருந்ததாக, சொல்லப்படுகிறது.
ஐரோப்பாவில், தெற்கு பிரான்ஸ் வரையில் ஆரோராக்கள் தென்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜெர்மனியில் பச்சை நிற ஆரோராக்கள் தென்பட்டுள்ளன. மேலும், இந்த சூரிய புயல் விளைவு இன்னும் நிறைவு பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில், பல ஆரோராக்கள் இரவு நேர வானை அலங்கரிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கிடையே, ஆங்காங்கு தென்பட்ட ஆரோராக்களின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.