2025ல் விண்கல்லுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் - சீனா அறிவிப்பு

சீனா, அடுத்த கட்டமாக, விண்வெளியில் உள்ள விண்கற்களை ஆய்வு செய்யும் திட்டத்தில் களமிறங்கி உள்ளது. பூமிக்கு அருகில் உள்ள விண்கல்லுக்கு, ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பி, மாதிரிகளை சேகரித்து வர திட்டமிட்டுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tianwen 2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், 2016HO3 என்ற விண்கல் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த விண்கல்லில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளதாக சீன விண்வெளி ஆய்வு […]

சீனா, அடுத்த கட்டமாக, விண்வெளியில் உள்ள விண்கற்களை ஆய்வு செய்யும் திட்டத்தில் களமிறங்கி உள்ளது. பூமிக்கு அருகில் உள்ள விண்கல்லுக்கு, ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பி, மாதிரிகளை சேகரித்து வர திட்டமிட்டுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tianwen 2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், 2016HO3 என்ற விண்கல் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த விண்கல்லில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளதாக சீன விண்வெளி ஆய்வு திட்டத்தின் மூத்த அதிகாரி சாங் ராங்காய் கூறியுள்ளார். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், பூமிக்கு வெளியே உள்ள விண்வெளி பொருள் ஒன்றில் இருந்து மாதிரிகளை எடுத்து வரும் சீனாவின் முதல் வெற்றியாக இருக்கும் என கூறியுள்ளார். இதே போன்ற திட்டத்தில், நாசா ஏற்கனவே வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu