இந்தியாவில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ரோபோ மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரோபோ மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் 35 வயதான வாலிபர் ஒருவர் இதய பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின் பின்னர், குருகிராமில் உள்ள எஸ்.எஸ்.இன்னோவேஷன் நிறுவன தலைவர் டாக்டர் சுதிர்ஸ்ரீவஸ்தவா தலைமையில், ரோபோடிக் கமிட்டி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 3டி கண்ணாடிகள் அணிந்த மருத்துவர்களால், கன்சோலுக்கு முன் அமர்ந்து, ரோபோ கைகளின் உதவியுடன் செய்யப்பட்டது. இது மிகவும் துல்லியமாகவும், நம்பிக்கையிடனும் செய்யப்பட்டு உள்ளது.