ஆப்பிரிக்க நாடான காங்கோவில், கடந்த வியாழக்கிழமை திடீரென கனமழை பெய்தது. இந்த கனமழையால், நதிகளில் அதிக வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள நீர் நகருக்குள் சூழ்ந்தது. மேலும், மலைப் பகுதிக்கு அருகில் உள்ள சந்தை ஒன்றில் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, பல்வேறு கிராமங்கள் முற்றிலுமாக மூழ்கியுள்ளன. இந்த பேரிடரில் சிக்கி எண்ணற்றோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
காங்கோவில் உயிரிழந்தோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 203 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் முனைப்புடன் நடத்தப்பட்டு வரும் நிலையில், மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர். இது தவிர, வெள்ளத்தால் 5000 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.