பசிபிக் பெருங்கடலின் தரைப்பகுதியில், திரவம் ஒன்று கசிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் Oregon கடற்கரைப் பகுதியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரவ கசிவு, மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்த வல்லதாக சொல்லப்பட்டுள்ளது. மிச்சிகன் டெக் யுனிவர்சிட்டி யின் அளவீடுகளில், 9 ரிக்டர் அளவிலான பூகம்பத்தை இது ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் இது குறித்த விரிவான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பசிபிக் பெருங்கடலில் உள்ள நீரின் வெப்பநிலையை விட, திரவ கசிவு ஏற்பட்டுள்ள பகுதியில் 9 டிகிரி வெப்பம் கூடுதலாக உள்ளது. எனவே, இது எரிமலை குழம்பு சார்ந்த கசிவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன், இந்த பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் வேளையில், சுனாமியும் ஏற்படும் என சொல்லப்பட்டுள்ளது.