வோடபோன் ஐடியா நிறுவனம், தனது மறு ஆக்க நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மொத்தம் 14000 கோடி ரூபாய் முதலீடு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை இந்திய அரசிடம் சுமப்பிக்கப்பட்டுள்ளது. வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களான ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் வோடபோன் குழுமம் ஆகியவை இணைந்து, பாதியளவுக்கும் மேலான முதலீடுகளை வழங்கும் என கூறப்படுகிறது.
விரைவில், ஆதித்ய பிர்லா மற்றும் வோடபோன் குழுமங்கள் இணைந்து 2000 கோடி முதலீடு செய்ய உள்ளன. ஏற்கனவே, கடந்த 2021 செப்டம்பரில் இந்த நிறுவனங்கள் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போதைய நிலையில், எஞ்சி உள்ள 7000 கோடி நிதியை வெளியிலிருந்து வரும் முதலீடுகள் மூலம் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நேரடி முதலீடுகளாகவோ, மாற்றத்தக்க முதலீடுகளாகவோ இவை ஈர்க்கப்படும் என்று கருதப்படுகிறது.