செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக, நாசா அங்கு ரோவரை அனுப்பி உள்ளது. இந்த ரோவர், தற்போது, செவ்வாய் கிரகத்தின் காலை மற்றும் மதிய நேர புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அதனை ஒன்றிணைத்து, ஒற்றை பெனாரோமிக் புகைப்படமாக நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
சுமார் 7.5 நிமிடங்களுக்கு, 5 தனித்தனி புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, ஒற்றை புகைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 8ம் தேதி காலை மற்றும் மதிய வேளைகளில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள Gale Crater பகுதியில், நாசாவின் ரோவர் மலையில் ஏறிக் கொண்டிருந்த பொழுது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. காலை நேர புகைப்படம் 9:20 மணிக்கும், மதிய வேளை புகைப்படம் 3:40 மணிக்கும் எடுக்கப்பட்டுள்ளது.