பிரிட்டனில் நடக்கும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஓஹியோவில் உள்ள கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய பிடன் , இறுதிச் சடங்கு நடைபெறும் தேதி உறுதி செய்யப்படவில்லை. இ௫ப்பினும் செப்டம்பர் 19 அன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சடங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறினார். மேலும் ராணியின் மகன் மூன்றாம் சார்லஸ் தனக்கு நன்றாக தெரியும். இருப்பினும் இதுபற்றி அவ௫டன் தான் இதுவரை பேசியதில்லை என்று கூறினார்.