விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது. இதற்கான தீர்வை நோக்கி நாசா பணியில் இறங்கியது. குறிப்பாக, விண்வெளியில் உள்ள வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையில் இருந்து தண்ணீரை பிரித்து தனியாக எடுத்து, மீண்டும் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. தற்போது, இந்த ஆராய்ச்சியில் 98% வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுநீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் சுத்தமான நீரின் அளவு 94 முதல் 98% உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்கால விண்வெளி திட்டங்களில் இந்த ஆராய்ச்சி மூலம் மிக முக்கிய பயன்கள் கிடைக்க உள்ளதாக நாசா பெருமிதம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படும் வீரர்கள், நாள் ஒன்றுக்கு 1 கேலன் தண்ணீர் பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த ஆராய்ச்சி மூலம், தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது. எனவே, அதிக அளவிலான தண்ணீர் சேமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.