இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நவம்பர் 9-ம் தேதி சொந்த ஊர் பயணம் செய்யும் பயணிகள் ரயில் டிக்கெட்களை இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்களை ரெயில்வே நிலையங்கள், ஐஆர்சிடிசி செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
இதே போல் ஜூலை 13ம் தேதியில் நவம்பர் 10ம் தேதி பயணிப்பதற்கும், ஜூலை 14ம் தேதியில் நவம்பர் 11ம் தேதி பயணிப்பதற்கும், ஜூலை 15ம் தேதியில் நவம்பர் 12ம் தேதி பயணிப்பதற்கும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சென்னை-மதுரை-திருநெல்வேலி வழி செல்லும் பாண்டியன் ரயில் மற்றும் நெல்லை விரைவு ரயில்களில் படுக்கை டிக்கெட்களும் பதிவாகி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமை முதல் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. அதனால் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.