தாம்பரம் கடற்கரை புறநகர் மின்சார ரயில்கள் சேவை நேரம் மாற்றம்

சென்னையில் மின்சார ரயில்களின் சேவை அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வருகிறது. தற்போது இதன் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் போன்ற நான்கு வழித்தடங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை நேரம் குறைக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடற்கரை - தாம்பரம் வழியாக இருந்த மின்சார ரயில்களின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில் தற்போது 8 சேவை குறைக்கப்பட்டு 116 ஆக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. […]

சென்னையில் மின்சார ரயில்களின் சேவை அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வருகிறது. தற்போது இதன் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் போன்ற நான்கு வழித்தடங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை நேரம் குறைக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடற்கரை - தாம்பரம் வழியாக இருந்த மின்சார ரயில்களின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில் தற்போது 8 சேவை குறைக்கப்பட்டு 116 ஆக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கடற்கரை -தாம்பரம் செல்லும் முதல் மின்சார ரயில் சேவை அதிகாலை 3.55 மணி முதல் கடைசி சேவையாக இரவு 11:59 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.54 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடைகிறது.

இதே போல் செங்கல்பட்டு- கடற்கரைக்கு இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 மணிக்கு வந்தடைகிறது. கடற்கரை -வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவையும் 70 இல் இருந்து 61 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவை முதல் சேவையாக அதிகாலை 4.10 மணி முதல் சேவையாக தொடங்கி இரவு கடைசி சேவையாக 11.35 மணிக்கு கடற்கரை நிலையம் வந்தடைகிறது. மேலும் மூர் மார்க்கெட்- அரக்கோணம் வழியில் 128 ஆக இருந்த மின்சார ரயில் சேவை 124 ஆக குறைக்கப்பட்டுள்ளது இது மூர் மார்க்கெட்டில் இருந்து முதல் சேவையாக நள்ளிரவு 12.15 முதல் தொடங்கி 1.05 மணிக்கு ஆவடியை சென்றடையும். அதை போல் பட்டாபிராமிலிருந்து 3:20 மணிக்கு புறப்படும் ரயில் கடைசி சேவையாக ஆவடிக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு சென்றடையும்.

கடற்கரை கும்மிடிப்பூண்டி வழியில் 47 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது இவை கடற்கரையில் இருந்து அதிகாலை 4:20 மணிக்கு முதல் சேவையாக தொடங்கி 6. 25க்கு சூலூர் பேட்டை செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3. 50 க்கு புறப்படும் ரயில் அதிகாலை 5.20 மணிக்கு மூர் மார்க்கெட்டுக்கு வந்து சேரும். மீண்டும் இரவு 11:20 க்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரயில் 1 மணிக்கு கும்முடிபூண்டி சென்றடையும். இரவு 9.40க்கு சூலூர் பேட்டையில் இருந்து புறப்படும் ரயில் மூர் மார்க்கெட்டுக்கு 11. 45 க்கு வந்து சேரும். தற்போது அறிவித்துள்ள புதிய அட்டவணைப்படி மொத்தம் 620 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன கடைசி சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu