ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை வென்று இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
தாய்லாந்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.இதில் ஓட்டப்பந்தயம், ட்ரிபிள் ஜம்ப், ஷாட் புட், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற ஆண் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலத்துடன் மூன்றாவது இடம் பிடித்தது.
இதில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜோதிகா ராஜு தங்கப்பதக்கம் வென்றார். இதே போல் ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான மும்மூனை போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். மேலும் தமிழக வீரர் சந்தோஷ் நேற்று நடந்த 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதக்கம் வெல்வது என்பது இதுவே முதன் முறையாகும்.