ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயக்கு விற்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆந்திராவின் கன மழை காரணமாக தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. அதனால் இதுவரை இல்லாத அளவு தக்காளியின் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இங்கிருந்து பெருமளவில் சென்னை,பெங்களூர், டெல்லி கொல்கத்தா போன்ற பெரு நகரங்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படும். கடந்த இரண்டு நாட்களாக பல இடங்களில் இருந்து 280 டன் தக்காளிகள் மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது. இதனால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று நிலவரப்படி ரூபாய் 200க்கு 1 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வட மாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.