இந்தியா, 5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது

September 14, 2022

வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் சந்தைப்படுத்தல் ஆண்டில், சுமார் 5 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி அளவை கணக்கிட்டு, கூடுதலாக மூன்று முதல் ஐந்து டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் சர்க்கரை உற்பத்தி, இந்த ஆண்டைப் போலவே 36 மில்லியன் டன் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு தேவைகள், எத்தனால் தயாரிப்புகள் உள்ளிட்டவை […]

வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் சந்தைப்படுத்தல் ஆண்டில், சுமார் 5 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி அளவை கணக்கிட்டு, கூடுதலாக மூன்று முதல் ஐந்து டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டின் சர்க்கரை உற்பத்தி, இந்த ஆண்டைப் போலவே 36 மில்லியன் டன் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு தேவைகள், எத்தனால் தயாரிப்புகள் உள்ளிட்டவை போக, ஏற்றுமதி செய்வதற்கு அதிக அளவில் சர்க்கரை இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், ஒரே முறையில் 8 அல்லது 9 மில்லியன் டன் அளவில் ஏற்றுமதி செய்வது உகந்ததல்ல என்பதால், முதற்கட்டமாக 5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு சர்க்கரை தேவை 27.5 மில்லியன் டன்கள் என்றும், எத்தனால் தயாரிப்புக்கு தேவைப்படும் சர்க்கரை அளவு 4.5 மில்லியன் டன்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 4 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு வணிகர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.சமீபத்தில், இந்தியாவில், கோதுமை ஏற்றுமதிக்கு தடை மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் போன்றவை அமல்படுத்தப்பட்ட நிலையில், சர்க்கரை ஏற்றுமதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu