2020 தேர்தல் முறைகேடு வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என வாஷிங்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவை ஏமாற்ற சதி செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் என 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாஷிங்டன் டி.சி. நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஆஜரானார். விசாரணையில், 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியாக இருப்பவர்களுடன் எவருடனும் சட்ட ரீதியாக தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் டிரம்ப் விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.














