மும்பை தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் உள்ள நீதிமன்றத்தில், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையில், ராணாவின் மனு நிராகரிக்கப்பட்டது. அதன்படி, விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ராணா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அதன்படி, மேல்முறையீட்டு வழக்கு நிறைவடையும் வரை அவரை நாடு கடத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.