ரஷ்யா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் கூடுதல் தடை விதிக்கப்படும் - அமெரிக்கா

September 14, 2023

வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் இரு நாடுகள் மீது கூடுதல் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. உக்கிரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இதற்காக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. எனினும் இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ கூறுகையில், வடகொரியா மற்றும் ரஷ்யா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பு தடை விதித்திருந்தோம். இப்போது ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் […]

வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் இரு நாடுகள் மீது கூடுதல் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உக்கிரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இதற்காக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. எனினும் இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ கூறுகையில், வடகொரியா மற்றும் ரஷ்யா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பு தடை விதித்திருந்தோம். இப்போது ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் மீண்டும் கூடுதல் தடைகளை விதிக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்றார்.
கொரோனா பரவலுக்கு பின்னர் முதல் முறையாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் ரஷ்யாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பயணம் செய்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே ஆயுத ஒப்பந்தங்கள் நடைபெற்று இருக்கலாம் என யூகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu