வட கொரியாவிற்கு ரஷ்யா அதிநவீன ஆயுத தொழில்நுட்ப உதவி வழங்கியது.
ரஷ்யா அதிபர் புதினின் அழைப்பை ஏற்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களும் தனிப்பட்ட முறையில் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிற்கு ஆயுத உதவி தேவைப்படுகிறது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் விரோத போக்கை காட்டி வரும் வடகொரியாவிற்கு தொழில் நுட்ப உதவியும், உணவு தேவையும் இருக்கிறது. எனவே இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்து கொள்கிறது. இந்த சந்திப்பின்போது இரு நாட்டு தலைவர்களும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கூட்டணிக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வடகொரியாவிற்கு ரஷ்யா அதிநவீன ஆயுத மற்றும் உளவு விண்கலத்திற்கான தொழில்நுட்ப உதவி வழங்கப் போகிறது.
இதுகுறித்து தென் கொரிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லிம் கூறுகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி இரு நாட்டு அதிபர்களும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு செய்ய முனைவது தென் கொரியாவிற்கு கவலை அளிக்கிறது. இது ஐநா சபையின் தீர்மானத்திற்கு எதிரானது. வடகொரியாவிற்கு ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு அளித்தால் தென்கொரியாவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.