துருக்கியில் சுமார் 1000 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கைது

October 4, 2023

துருக்கியில் சுமார் 1000 குர்திஷ் கிளர்ச்சியாளர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் அங்கிருந்து கொண்டு துருக்கி நாடு மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அடக்க துருக்கி அரசு பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் துருக்கி நாடு […]

துருக்கியில் சுமார் 1000 குர்திஷ் கிளர்ச்சியாளர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் அங்கிருந்து கொண்டு துருக்கி நாடு மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அடக்க துருக்கி அரசு பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் துருக்கி நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்நாட்டு ராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த தாக்குதலுக்கு காரணம் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் துருக்கி ராணுவத்தினர் வடக்கு இராக்கில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அப்போது 20 முகாம்கள் அழிக்கப்பட்டன. அதோடு துருக்கியில் 16 பிராந்தியங்களில் ராணுவத்தினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 1000 குர்திஷ் கிளர்ச்சியாளர்களை கைது செய்தனர். அதோடு அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த நாட்டின் உள்துறை மந்திரி கூறுகையில், குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் இதுபோல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் இனிமேல் எல்லை தாண்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu