தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடாத காரணத்தினால் தஞ்சை மாவட்டத்தில் 33 சதவீதம் அளவுக்கு குறுவை மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக நீரின் அளவு குறைந்து வந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகிவிட்டது.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 78486 ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்யப்பட்டதில் 49000 ஹெக்டேர் அளவில் அறுவடை பணிகள் முடிந்தது. ஆனால் தமிழகத்தில் உரிய நீரை கர்நாடக அரசு வழங்காத காரணத்தினால் 33 சதவீதம் அளவிற்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் துறை புள்ளியல் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் 6000 கிலோ நெல் கிடைத்த இடத்தில் 4632 கிலோ நெல் தான் கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை குறுவை மகசூல் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பெருமளவில் குறுவை பயிர்கள் கருகி வீணாகி விட்டன. மேலும் சம்பா சாகுபடிகளை தொடரலாமா என தெரியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகம்