கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக முடித்துள்ளது.உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான இடைவெளி அதிகரித்து வந்துள்ளது. அவ்வப்போது மோதல் போக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த இது பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது. அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரஷ்யா செலுத்தியுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது ரஷ்யாவின் வெள்ளைக்கடல் பகுதியில் அலெக்சாண்டர் 3 அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து புலாவா ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. அது அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை ஆகும். இலக்கை குறி தவறாமல் இந்த ஏவுகணை தாக்கியது. இந்த சோதனை வெற்றி அடைந்தது. இதன் மூலம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. போரிஸ் வகை அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பல்களில் அலெக்சாண்டர் 3 மிகவும் நவீனமானதாகும். இதில் 16 புலாவா ஏவுகணைகள் பொருத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.