மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று மலேசியா அரசு அறிவித்துள்ளது. 7 மாநிலங்களில் 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 84,547 பேர் 488 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான கெலந்தனில் 56,029 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான டெரெங்கானு மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அங்கு 21,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.