வட துருவ ஒளிகள் என்று அழைக்கப்படும் ஆரோராக்கள், பல்கேரியாவில் நேற்று இரவு, முற்றிலும் புதிய விதமாக காட்சியளித்துள்ளன. முழுமையாக சிவப்பு நிற வண்ணத்தில் அவை தென்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
முதலில், பல்கேரியாவின் வடகிழக்கு பகுதியில் தோன்றிய சிவப்பு நிற ஆரோராக்கள், சில நிமிடங்களில் அந்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக தென்பட்டன. பொதுவாக, பல்கேரியா நாட்டில் மிகவும் அபூர்வமாகவே துருவ ஒளிகள் தென்படும். அந்த வகையில், முற்றிலும் செந்நிறமாக தென்பட்ட ஆரோராக்களால் பல்கேரியா நாட்டு மக்கள் பரவசமடைந்துள்ளனர். பல்கேரியாவுக்கு முன்னதாக, ரோமானியா, ஹங்கேரி, செக் குடியரசு, உக்ரைன் ஆகிய நாடுகளிலும் ஆரோராக்கள் தென்பட்டுள்ளன.