காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்று மாசு ஏற்பட்டு புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. இதன் எதிரொலியாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் மாதம் குளிர்கால விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டு வரும் 9ம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என டெல்லி கல்வித்துறை அறிவித்துள்ளது.