எரிமலை வெடிப்பால் ஜப்பானில் புதிய தீவு உருவானது

November 10, 2023

ஜப்பானில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததில் புதிதாக தீவு ஒன்று உருவானது. தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமா என்ற இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் எரிமலை ஒன்று மூன்று வாரங்களுக்கு முன்பாக வெடிக்க தொடங்கியது. அந்த வெடிப்பு நிகழ்ந்த பிறகு எரிமலை சாம்பலும், பாறைகளும் கடல் ஓரத்தில் சேர்ந்து கடலுக்கு மேல் பரப்பில் உயர்ந்து தீவு போல காட்சியளிக்கிறது. இந்த மாத துவக்கத்தில் இந்த நிலம் உருவானது. இந்த தீவு 20 மீட்டர் உயரத்துடனும் 100 […]

ஜப்பானில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததில் புதிதாக தீவு ஒன்று உருவானது.
தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமா என்ற இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் எரிமலை ஒன்று மூன்று வாரங்களுக்கு முன்பாக வெடிக்க தொடங்கியது. அந்த வெடிப்பு நிகழ்ந்த பிறகு எரிமலை சாம்பலும், பாறைகளும் கடல் ஓரத்தில் சேர்ந்து கடலுக்கு மேல் பரப்பில் உயர்ந்து தீவு போல காட்சியளிக்கிறது. இந்த மாத துவக்கத்தில் இந்த நிலம் உருவானது. இந்த தீவு 20 மீட்டர் உயரத்துடனும் 100 மீட்டர் விட்டத்துடனும் எழுந்துள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவம் நடந்த போதிலும் தீவு போன்ற நிலம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது என்று ஜப்பான் நாட்டு கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த தீவு நிலைத்தன்மை இல்லாததால் அடல் அலையில் அடித்து செல்லப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்கு முன்பும் உலகில் பல இடங்களில் இது போன்ற தீவுகள் உருவாகியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu