59 ஆண்டுகள் கழித்து பூமிக்கு மிக அருகில் வரும் வியாழன் கோள்

September 26, 2022

சுமார் 60 ஆண்டுகள் கழித்து, சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு 13 மாதத்திலும் வியாழன் கிரகம் பூமியிலிருந்து பார்க்கும்போது பெரியதாக தெரியும்படி, பூமிக்கு எதிர் திசையில் தெரியும். தற்போது, இந்த வானியல் நிகழ்வுடன் சேர்த்து, கூடுதலாக, பூமிக்கு மிக அருகில் வியாழன் கிரகம் வரவுள்ளது. பூமியிலிருந்து சுமார் 367 மில்லியன் மைல்கள் தொலைவில் வியாழன் கிரகம் வர உள்ளது. […]

சுமார் 60 ஆண்டுகள் கழித்து, சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு 13 மாதத்திலும் வியாழன் கிரகம் பூமியிலிருந்து பார்க்கும்போது பெரியதாக தெரியும்படி, பூமிக்கு எதிர் திசையில் தெரியும். தற்போது, இந்த வானியல் நிகழ்வுடன் சேர்த்து, கூடுதலாக, பூமிக்கு மிக அருகில் வியாழன் கிரகம் வரவுள்ளது. பூமியிலிருந்து சுமார் 367 மில்லியன் மைல்கள் தொலைவில் வியாழன் கிரகம் வர உள்ளது. கடந்த 1963 ஆம் ஆண்டு இதே போன்ற நிகழ்வு ஏற்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வானியல் நிகழ்வை நாம் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், அதற்குப் பின்னரும், வியாழன் கிரகம் வானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த வானியலாளர் டி எஸ் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “சென்னையிலிருந்து வியாழன் மற்றும் சனி கிரகங்களை தொலைநோக்கி வழியாகப் பார்க்க முடியும். இந்த நிகழ்வைக் காண பலரும் ஆவலுடன் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

“தொலைநோக்கிகள் மற்றும் பைனாகுலர்கள் மூலம் வியாழன் கிரகத்தை தெளிவாகக் காணலாம். அத்துடன், வியாழன் கிரகத்தின் 59 துணைக் கோள்களில் சிலவற்றையும் தற்போது காண முடியும். உயரமான கட்டிடங்கள் அல்லது மலைப்பகுதிகளில் இருந்து பார்த்தால் இந்த நிகழ்வை தெளிவாகக் காணலாம்” என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu