மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளை நாசா மற்றும் ஜப்பான் இணைந்து அனுப்பவுள்ளது.
Lignosat என்ற பெயரில் ஒரு சிறிய காபி கோப்பை அளவிலான செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்னோலியா மரத்தால் செய்யப்பட்ட இந்த செயற்கைக்கோள், வரும் 2024 ஆம் ஆண்டில் புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. பொதுவாக, மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் விண்வெளியில் நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்கும். அத்துடன், அதன் காலம் முடிவடைந்த பிறகு, மீண்டும் பூமியின் வளிமண்டலத்தை அடைந்தால், உடனடியாக சாம்பல் ஆகிவிடும். அத்துடன், இது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஒன்றாக இருக்கும். எனவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொருளை கடந்த வருடம் ஆய்வு செய்த பிறகு, மரத்தால் ஆன Lignosat செயற்கைக்கோளை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஜப்பான் மற்றும் நாசா இணைந்து பணியாற்றி வருகின்றன.