எல்-நினோ தாக்கத்தால் உலகளவில் சா்க்கரை விலை உயர்ந்துள்ளது.
எல் நினோ தாக்கத்தால் பருவநிலை மாற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஆசியாவில் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. எல்நினோ தாக்கம் காரணமாக இந்தியா தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் ஏற்பட்ட வானிலை பாதிப்பு காரணமாக கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சர்க்கரை வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் எத்தனால் போன்ற உயிரி எரிபொருள்கள் உற்பத்திக்கும் சக்கரை அதிக அளவில் பயன்படுகிறது. நாட்டின் முக்கிய உற்பத்தி மையமான மகாராஷ்டிரத்தில் கரும்பு சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சர்க்கரை உற்பத்தி எட்டு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.