காசாவில் ஹமாஸ் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காசாவில் ஹமாஸ் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கத்தார் அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 10:30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைகிறது. முன்னதாக போர் நிறுத்தம் முடிவடைந்ததும் தாக்குதலை தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்திருந்தார். இதனால் அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்புவதாக நேற்று தெரிவித்திருந்தது. ஒவ்வொரு நாளும் பத்து பிணை கைதிகள் வரை பரிமாற்றம் செய்யப்படுவார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.