பண மோசடி தொடர்பாக விவோ மீது குற்றப்பத்திரிக்கை

December 7, 2023

பண மோசடி விவகாரம் தொடர்பாக விவோ இந்தியா நிறுவனத்தின் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. கைபேசி நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு மிகப்பெரிய சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனையில், விவோ நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 62476 கோடி ரூபாயை, சட்டவிரோதமாக சீனாவுக்கு விவோ நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்த பண மோசடியில், பல்வேறு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளன. இது தொடர்பான விசாரணை நடைபெற்று […]

பண மோசடி விவகாரம் தொடர்பாக விவோ இந்தியா நிறுவனத்தின் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

கைபேசி நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு மிகப்பெரிய சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனையில், விவோ நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 62476 கோடி ரூபாயை, சட்டவிரோதமாக சீனாவுக்கு விவோ நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்த பண மோசடியில், பல்வேறு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளன. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. அதன் பெயரில், சீனாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக இவர்கள் செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவோ நிறுவனத்தின் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu