மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் புயல் காரணமாக திங்கள்கிழமை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் என நான்கு நாட்கள் தொடர்ந்து சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் பெரும்பாலான தாலுகாக்களில் இன்று பள்ளி விடுமுறை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளிகளை திறப்பதற்கு முன்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் புத்தகம் சீருடை ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.