சிங்கப்பூரில் தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மக்கள் பயன்பாட்டிற்கு தானியங்கி பேருந்துகளை இயக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. இந்த பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. சீனாவை சேர்ந்த வி ரைட் என்னும் நிறுவனம் தானியங்கி போக்குவரத்து பேருந்துகளை உருவாக்கி வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கக்கூடிய தானியங்கி வாகனத்தை தயாரிக்கும் ஒரே நிறுவனமாக இது உள்ளது. அமெரிக்கா, அமீரகம், சீனா போன்ற நாடுகளில் இந்த நிறுவனம் சோதனை செய்து பார்க்க அனுமதி வாங்கி இருந்தது. தற்போது சிங்கப்பூரிலும் அனுமதி வாங்கி உள்ளது. சிங்கப்பூரின் தரைவழிப் போக்குவரத்து ஆணையம் எம் ஒன் மற்றும் டி1 எனும் இரண்டு அதிகாரப்பூர்வ அனுமதிகளை வழங்கியுள்ளது. இந்த தானியங்கி பேருந்துகள் குறைந்த வேகத்தில், குறிப்பிட்ட வழிகளில், குறைந்த போக்குவரத்து நெரிசல்கள் உள்ள பகுதிகளில் முதல் கட்டமாக இயக்கப்படும். அதோடு இது சோதனை ஓட்டம் என்பதால் ஒரு ஓட்டுநர் பாதுகாப்பிற்காக இதனுள் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.