நெல்லையில் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

December 20, 2023

மழை பாதிப்பிற்கு பின்னர் நெல்லை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இதனால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நலன் கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மழை ஓய்ந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து […]

மழை பாதிப்பிற்கு பின்னர் நெல்லை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இதனால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நலன் கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மழை ஓய்ந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது நெல்லை ரயில் நிலையத்தில் வெள்ளநீர் வடிந்த நிலையில் ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதில் நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில், செங்கோட்டை - தாம்பரம் இடையே இயங்கும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஆகியவை வழக்கம்போல செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu