எல் 1 புள்ளியை நெருங்கும் ஆதித்யா விண்கலம் - இஸ்ரோ அறிவிப்பு

December 26, 2023

சூரியனை ஆய்வு செய்வதற்காக, இந்தியா தனது முதல் விண்கலத்தை விண்ணில் செலுத்தி உள்ளது. ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், L1 என்ற தனது நிலைநிறுத்தப் புள்ளியைக் குறித்து அழைக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம், எல் 1 இலக்கை ஜனவரி 6ஆம் தேதி எட்டும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் புள்ளி எண் 1 அமைந்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள இந்தப் […]

சூரியனை ஆய்வு செய்வதற்காக, இந்தியா தனது முதல் விண்கலத்தை விண்ணில் செலுத்தி உள்ளது. ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், L1 என்ற தனது நிலைநிறுத்தப் புள்ளியைக் குறித்து அழைக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம், எல் 1 இலக்கை ஜனவரி 6ஆம் தேதி எட்டும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் புள்ளி எண் 1 அமைந்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள இந்தப் புள்ளியில், சுற்றுவட்ட பாதையில் இருந்து கொண்டு, ஆதித்யா விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதன் ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், வரும் ஜனவரி 6ஆம் தேதி, L1 புள்ளியை ஆதித்யா எட்டும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். துல்லியமாக எத்தனை மணிக்கு நிலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்பது குறித்த விவரங்களை பின்னர் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu