டிசிஎஸ் நிறுவனத்துக்கு மகாராஷ்டிராவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு, டிசிஎஸ் தொடர்பாக எக்கசக்க புகார்கள் வந்ததாகவும், அதற்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம், கிட்டத்தட்ட 2000 ஊழியர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்ததாக மகாராஷ்டிரா தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு புகார் வந்துள்ளது. கிட்டத்தட்ட 300 டிசிஎஸ் ஊழியர்கள் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர, டிசிஎஸ் நிறுவனத்தின் ஒழுங்காற்று விதிகளுக்கு கட்டுப்படாத 900 ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகத்துக்கு புகார் கிடைத்துள்ளது. மேலும், சில ஊழியர்களுக்கு 6000 ரூபாய் மட்டுமே சம்பள பணமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில ஊழியர்களுக்கு அலுவலகங்களுக்குள் நுழையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், வருகை பதிவேடு தளம் முடக்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மீது வரும் ஜனவரி 18ஆம் தேதி டிசிஎஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.