டாட்டா நிறுவனம் வரும் 2028 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை தக்கவைத்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்று பெருமையை ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை 2028 ஆம் ஆண்டு வரை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ஒவ்வொரு சீசனிலும் தலா 500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














