ஐபிஎல் 2024 தொடரின் 29 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையே நடைபெற்றது.
ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதில் ருதுராஜ் மற்றும் துபே ஆகியோர் அதிகபட்ச ரன்கள் முறையே 69 மற்றும் 66 என எடுத்தனர். இதனை அடுத்து மும்பை அணி களமிறங்கியது. இதில் ரோஹித் சதம் எடுத்தார். மேலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்நிலையில் மும்பை அணியால் 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.