இந்தியா கூட்டணியில் இருந்து ஜெயந்த் சௌத்ரி தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி விலகியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உத்திரபிரதேசத்தில் ராஷ்டிரிய லோக்தள் கட்சி ஜெயந்த் சவுத்ரி தலைமையில் இயங்கி வந்தது. இவருக்கு உத்தரபிரதேசத்தில் ஜாட்சி இன மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது. இக்கட்சி சமாஜ்வாடி கட்சி உடன் இணைத்து இயங்கி வந்ததன் காரணமாக இந்தியா கூட்டணியிலும் இடம்பெற்றிருந்தது. தற்போது சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு ஜெயந்த் சவுத்ரி நன்றி தெரிவித்தார். மேலும் கட்சி இடமாறும் எனவும் தகவல் வெளியான நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக ஜெயந்த் சவுத்ரி அறிவித்துள்ளார். இதற்கு அடுத்து பாஜக தலைமையிலான அணியில் அவர் சேர முடிவு செய்துள்ளார்.