மஹிந்திரா வாகன நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 61% உயர்ந்து 2454 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இது பொருளாதார நிபுணர்களின் கணிப்பை விட சற்று குறைவானதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வாகன நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 25228.51 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.51% உயர்வாகும். மேலும், எஸ்யூவி ரக வாகன விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 21% சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. அத்துடன், டிராக்டர் பிரிவிலும் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 10% உயர்ந்து 3590 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.