காசா எல்லையில் மிகப்பெரிய சுவரை எகிப்து கட்டி வருகிறது. கிட்டத்தட்ட 2 மேல் தொலைவுக்கு கூடுதலாக சுவரின் அகலம் உள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தெற்கு காசா பகுதியில், எகிப்து தடுப்பு சுவர் கட்டி வருகிறது. மக்சார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் கடந்த 5 நாட்களில், எகிப்து காசா எல்லை பகுதியை புகைப்படம் எடுத்தது. அப்போது, காசா எல்லையில் இருந்து மத்திய தரைக்கடல் வரையில் எகிப்தின் எல்லைச் சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விரைவில், எகிப்து ராஃபா எல்லை பகுதியிலும் சுவர் கட்டப்படும் என கூறப்படுகிறது. இந்த எல்லைச்சுவர் 5 அடி உயரத்தில் கட்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் போர் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனர்கள் எகிப்து நாட்டுக்குள் தஞ்சம் புகுந்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பு எல்லை சுவர் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.