ஜாம்பியாவில் காலரா வியாதி பாதித்தவர்கள் எண்ணிக்கை 16,526 ஆக உள்ளது. மேலும் 613 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜாம்பியா நாட்டில் கடந்த ஜனவரி 31ம் தேதி வரை காலரா நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக உள்ளது. இதில் 613 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இது லூசாகா மாகாணத்திலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜாம்பியா நாட்டிற்கு தேவையான நீர், சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருள்கள் அடங்கிய 3.5 இடையில் உதவி பொருட்கள் இந்தியா சார்பில் இரண்டாவது முறையாக நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு விவகாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்த உதவி பொருட்களை இந்திய தூதர் வழி ஜாம்பியா அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று கடந்த ஆறாம் தேதி மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.