ராகுல் காந்திக்கு அஸ்ஸாம் போலீசார் சம்மன்

February 20, 2024

ராகுல் காந்தி அஸ்ஸாம் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்ட பொழுது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூரில் தொடங்கி மும்பையை நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் கடந்த மாதம் அசாம் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ராகுல் காந்தி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தின் போது கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதை தொடர்ந்து போலீசார் வழக்கு […]

ராகுல் காந்தி அஸ்ஸாம் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்ட பொழுது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூரில் தொடங்கி மும்பையை நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் கடந்த மாதம் அசாம் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ராகுல் காந்தி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தின் போது கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன் அடுத்த கட்ட விசாரணைக்காக அசாம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் வருகிற 23ஆம் தேதி பகல் 11:30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் அசாம் போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அஸ்ஸாம் காங்கிரசார் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ராகுலை கைது செய்வதற்காக மறைமுக திட்டம் திட்டி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu