தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூபாய் 16.31 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை

February 23, 2024

கோவாவில் நடைபெற்ற 37 ஆவது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வென்ற 601 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். விழாவில் கோவாவில் நடைபெற்ற 37-வது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ […]

கோவாவில் நடைபெற்ற 37 ஆவது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வென்ற 601 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். விழாவில் கோவாவில் நடைபெற்ற 37-வது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டி, ஜெர்மனி எட்டாவது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் பதக்கங்கள் வென்று 601 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூபாய் 16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று சதவீதம் வேலைவாய்ப்பு ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கால்பந்து வீராங்கனை எஸ். ரங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை ஆர்.சங்கீதா, வூசு வீராங்கனைகள் அகல்யா மற்றும் ஆர்.வெர்ஜின் ஆகியோர் வணிகவரி மற்றும் பத்திர புத்தகத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்ற அரசு பணியாளர் ஆணை வழங்கப்பட்டது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu