கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு பேருந்துகள் வரும் நேர,ம் வந்து கொண்டிருக்கும் இடம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் சென்னை பஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை மாநகர பேருந்துகளில் ஜி பி எஸ் கருவி பொருத்தப்பட்டு பேருந்துகள் வரும் நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் உள்ளிட்டவற்றை ஆண்ட்ராய்டு செல்போனில் அறிந்து கொள்ளும் சென்னை பஸ் செயலி கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆண்ட்ராய்டு செல்போனில் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் ஆப்பிள் நிறுவன செல்ஃபோன்கள் பயன்படுத்துவதற்கான ஐஒஎஸ் தளத்தில் செயல்படுத்த வென்றும் என நீண்ட நாட்களாக கோரிக்க வைக்கப்பட்டு வந்ததும். தற்போது ஐஓஎஸ் தளத்தில் இயங்கும் வகையிலான சென்னை பஸ் செயலியை அமைச்சர் ச.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்.