டெக்சாஸில் காட்டுத்தீ - அணுமின் நிலையம் மூடல்

February 28, 2024

டெக்ஸாஸ் மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால், பொதுமக்கள் தீயை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரேக் அபௌட் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில், காட்டுத்தீ காரணமாக, டெக்சாஸ் […]

டெக்ஸாஸ் மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால், பொதுமக்கள் தீயை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரேக் அபௌட் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில், காட்டுத்தீ காரணமாக, டெக்சாஸ் அருகே உள்ள பேண்டெக்ஸ் அணுமின் நிலையம் தனது செயல்பாடுகளை நிறுத்தி உள்ளது. காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu